“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

By Swetha on ஆடி 6, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும் இடையே வெறும் 100 ரூபாய் பணம் தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நாளடைவில் இருவருக்கும் இடையே பெரிய குடும்பத் தகராறாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று அவதேஷ் மது அருந்திவிட்டு வந்து, தனது மனைவியை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி, கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமான முறையில் தீ வைத்துள்ளார்.

   

அவதேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரும் உறவினர்களும், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவதேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக முயன்ற மனைவி பிரியங்காவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.