மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பாண்டியராஜன் (40) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் பாண்டியராஜன் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் பள்ளத்தில் பூ மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகின்றார். பாண்டியராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கடையை முடித்துவிட்டு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியராஜன் வீட்டிலிருந்த மனைவி விஜயலட்சுமி உடன் வாக்குவாதம் செய்து தகராறு ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு கட்டத்தில் பாண்டியராஜன் தன்னுடைய மனைவியை அடித்து கீழே தள்ளி விட்டதால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி கீழே இருந்த இரும்பு கம்பியை எடுத்து கணவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டியராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விஜயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறியில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…