உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் முண்டியா குர்த் கிராமத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் மனைவியால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயந்திராவின் சகோதரர் அழைத்த புகாரில், எனது அண்ணனுக்கு இரண்டு மகள்கள் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். அண்ணன் அவர்களை தடுக்கவோ அல்லது அறிவுரை கூறவும் முயன்ற போது அவர்கள் அதைக் கேட்க மறுத்தனர்.
ஒருமுறை மகள்கள் வைத்திருந்த ஒரு தொலைபேசியை பார்த்து என் அண்ணன் அவர்களை கண்டித்தார். அப்போது அவருடைய மனைவியும் இரண்டு மகள்களும் சேர்ந்து அவரை தாக்கி அடித்த வாரே எங்கோ இழுத்துச் சென்றனர். பக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்திய பிறகு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜயேந்திராவின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருந்தாலும் கொலையில் இரண்டு மகள்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய சண்டை தான் கொலைக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகள்களை கண்டித்ததால் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
