“ஓம்” பிரணவ மந்திரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது…? அதன் சிறப்புகள் என்ன…?

Spread the love

ஓம் எனும் மந்திரம் மிகவும் புனிதமானது. பிரபஞ்சத்தின் ஒலியே ஓம் தான். ஓம்காரத்தில் தான் பிரபஞ்சம் சுற்றுகிறது என்று இந்து மத சாஸ்திரப்படி கூறுவார்கள். இந்து மதத்தில் ஓம் மிகவும் முக்கியமாய்ந்தது. அது சக்தி வாய்ந்த மந்திரம் என்று கூறுவார்கள். இந்த ஓம் என்பது பிரணவ மந்திரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது. அதன் சிறப்புகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்து மத வழிபாட்டில் கூறப்படும் மந்திரத்தின் ஒரு பகுதி ஓம். பிரணவம் என்பது சிருஷ்டிக்கு முன் இருந்த முதல் ஒலியும் பிரளயத்திற்கு பின் இருக்கும் ஒலியும் ஆகும். ஓம் என்பது கடவுளை தான் குறிக்கிறது. உருவமற்ற பெயற் கடவுளின் நித்திய பேரின்பத்திற்கான பாதையாக மகாயோகிகள் இந்த ஓம் மந்திரத்தை மனதில் வைத்து தியானித்து இருந்திருக்கிறார்கள்.

இந்தப் பிரணவம் என்பது ஐந்து பகுதிகளை கொண்டது. அகார உக்கார மகர பிந்து நாதம் ஆகியவை ஆகும். மிகவும் மகிமை வாய்ந்த பஞ்சாப்ஷண மந்திரங்களில் இது ஒன்றாகும். பூமியின் மேல் வளிமண்டலம் எனப்படும் பிரபஞ்சத்தின் ஒலியை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூட இந்த ஒலியை ஓம் உடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.

இந்த ஓம் என்ற மந்திரத்தை நாம் ஜெபித்து கொண்டே இருக்கும்போது அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் ஏராளம். உடலையும் உள்ளத்தையும் சீராக வைக்க உதவுவது இந்த ஓம் எனும் மந்திரம். இந்த ஓம் மந்திரத்தை கூறி பிரார்த்தனை செய்யும் ஒவ்வொன்றும் பலன் கிடைக்கும் என்ற கூறப்படுகிறது மற்றும் அந்த ஓம் என்ற ஒலி எழுப்பும்போதே மூச்சுக்காற்று நம் உடம்பிற்குள் போய் வெளி வருகிறது. இது நம் உடலை சுத்தப்படுத்தும் ஒரு முறையாகவும் பார்க்கப்படுகிறது. ஓம் என்ற மந்திரத்தை நாம் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கும்போது அதனால் ஒரு சக்தி ஏற்பட்டு நம்மை சுற்றி இருக்கும் கெட்டவைகளை அழித்து நல்லவை ஏற்படும் என்பது ஐதீகம்.

admin

Recent Posts

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

3 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

7 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

15 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

22 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

27 minutes ago

அண்ணன் போட்ட ‘ஆர்டர்’.. தங்கை எடுத்த ‘ஆக்சன்’!… நாடாளுமன்றத்தில் கனிமொழி கொடுத்த ‘ஷாக்’ நோட்டீஸ்… பாஜகவின் மசோதாவிற்கு செக் வைத்த திமுகவின் வியூகம்…!!!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…

28 minutes ago