ஹைதராபாத் அம்பர்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ராமராஜு, அவரது மனைவி மாதவி மற்றும் அவர்களது 24 வயது மகன் சஷாங்க் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் ஹோட்டல் தொழில் நடத்தி வந்த ராமராஜு, தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர் தனது நண்பருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார், ஆனால் அந்தத் தகவலை நண்பர் பார்ப்பதற்குள் மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
இதனால் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இது ஒரு திட்டமிட்ட கூட்டுத் தற்கொலை எனத் தெரியவந்துள்ளது. ராமராஜு தனது மனைவி மாதவியை தலையணையால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர்களது மகன் சஷாங்க் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து வாங்கிய கடன்களே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…