பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துல என்ன ஆச்சு?… எல்லாரும் ஏன் அழுகுறாங்க?… குழப்பத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் ஆயிரம் எபிசோட் நிறைவு விழாவில் மறைந்த நடிகை சித்ராவை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பிரபலமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் சுஜிதா, ஸ்டாலின், வி ஜே சித்ரா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், காவியா அறிவுமணி ,சாய் காயத்ரி போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இத்தொடரில் முல்லையாக முதலில் நடித்த நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ரசிகர்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

   

தற்பொழுது அந்த கதாபாத்திரத்தை ஏற்று காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். இவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விட்டு விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘ஆயிரம் எபிசோட் நிறைவு விழா’ விஜய் டிவியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் அனைவரும் மனதையும் முல்லையாக கொள்ளை அடித்த வி ஜே சித்ரா வை நினைவுகூர்ந்து, அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி சீரியல் குழுவினர் அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கண்ணீரில் மூழ்கியது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar