பூரான் கடிச்சிருச்சா..? உப்பு கூட இந்த ஒரு இலையை மட்டும் வச்சி கசக்கி தேய்த்தால் போதும்… உடனே விஷம் முறிந்துவிடும்..!

By Divyamayakannan on புரட்டாதி 4, 2025

Spread the love

பூரான் கடிக்கு நாட்டு வைத்தியத்திலேயே நிறைய சிகிச்சை முறை உள்ளது. பூரான் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1. குப்பைமேனி இலை மற்றும் உப்பு இரண்டையும் 150 கிராம் வீதம் எடுத்துக் கொண்டு மைய அரைக்க வேண்டும். பின்பு அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் எடுத்து கலந்து உடல் முழுவதும் நன்றாக பூசிக்கொள்ள வேண்டும். தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து விடலாம். இதுபோன்ற தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் பூரான் கடித்த தடிப்பு மற்றும் அரிப்பு இரண்டுமே மறைந்து விடும்.

   

2. ஊமத்தை தைலம் தயாரித்து தேய்த்து குளிக்கலாம். தைலத்தை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். நல்லெண்ணெய் கால் லிட்டர், ஊமத்தம் செடி வேர் 100 கிராம் இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வேரை நன்கு இடித்து நல்லெண்ணெயில் ஊற வைத்து, வெயிலில் வைத்து பூரான் கடித்த இடத்தில் தினந்தோறும் தடவி குளித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.