நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயதசமியை சென்னையில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலில் வரும் கண்ணசைவினால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.தெலுங்கில் ‘மகாநதி’என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பிறந்திருந்தாலும் ,இவர் சென்னையிலேயே வளர்ந்து படித்தவர். தற்பொழுது இவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் விஜயதசமியை கொண்டாடியுள்ளார். அப்புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…
தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…
இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…