நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயதசமியை சென்னையில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துக் கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ரஜினி முருகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலில் வரும் கண்ணசைவினால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இன்று தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் இவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.தெலுங்கில் ‘மகாநதி’என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவில் பிறந்திருந்தாலும் ,இவர் சென்னையிலேயே வளர்ந்து படித்தவர். தற்பொழுது இவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் விஜயதசமியை கொண்டாடியுள்ளார். அப்புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.