ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் ‘வர்மாலா’ சடங்கின் போது மேடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணமக்கள் மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்தபோது, அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கை வெடிக்கச் செய்யப்பட்டதில் ஏற்பட்ட ஒரு சிறு பொறி, மேடையிலிருந்த அலங்காரப் பொருட்களில் பட்டு தீ மளமளவெனப் பரவியது.
தீ விபத்து ஏற்பட்ட அந்த நொடியில், மணமகன் துரிதமாகச் செயல்பட்டு மணமகளை மேடையிலிருந்து கீழே தள்ளிக் காப்பாற்றினார். சில வினாடிகளுக்குள் மேடை முழுவதும் தீப்பிழம்புகளாக மாறியது. மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டிய தருணம், கண்ணிமைக்கும் நேரத்தில் மரண பயத்தைத் தரும் பயங்கரமான காட்சியாக மாறியது. அதிர்ஷ்டவசமாக மணமக்கள் இருவரும் எந்தக் காயமுமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடையே பெரும் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. அனைவரும் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண விழாக்களில் இதுபோன்ற ஆபத்தான வாணவேடிக்கை அலங்காரங்களைத் தவிர்த்து, பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். கீர்த்தனா, மிகச் சரளமான ஹிந்தியில் பேசும் வீடியோ…