நாங்க செத்து சாம்பலான கூட தனித்துதான் போட்டி போடுவோம்… ஆவேசமாக பேசிய சீமான்..!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

சென்னை ஆயிரம் விளக்கில், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

விஜய் வருகையால் நா.த.கவிற்கு வாக்குகள் குறையும், என நான் பயந்து, கூட்டணிக்கு போய் விடுவேன் என எதிர்பார்க்கிறார்கள். அரசியலில், விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் எப்பொழுதும் செய்ய மாட்டேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் நா.த.க தனித்துப் போட்டியிட்டு தோற்று, செத்து சாம்பல் ஆனாலும், தனியாகவே போட்டியிடுவோம் என்றார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி எப்பொழுதும் தனித்து செயல்பட்டு வருகிறது.

   

2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நா.த.க, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தான், முதல் முதலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்பொழுது இருந்து இப்பொழுது வரை நா.த.க தனித்தே போட்டியிட்டு வருகிறது. அதேபோல் போட்டியிடும் வேட்பாளர்களில், சரி பாதி பேர் பெண்கள், என்ற கொள்கையை செயல்படுத்தி வருகிறது. விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நா.த.க, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு போட்டியிட்டது.