டெல்டா மாவட்டங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருத்துறைப்பூண்டியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் – கோடியக்கரை சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம், எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஸ்டாலினை போல வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை.
மக்களுடைய விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும். திமுக ஒரு ஊழல் கட்சி, ஊழல் அரசாங்கம், அதனை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகின்றது. அந்த நிலைப்பாட்டோடு எங்களுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. சரியான நேரத்தில் உங்களுக்கு மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது தான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இ பி எஸ் பேசியுள்ளார்.
