குளிர்காலத்தில் கொத்துக் கொத்தாக முடி உதிர்வது ஒரு பொதுவான பிரச்சனையாகும். பருவகால மாற்றங்களால் ஏற்படும் வறண்ட காற்றுதான் இதற்கு முக்கியக் காரணம். எனவே, இந்தப் பருவத்தில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தச் சில மாற்றங்களைச் செய்வது அவசியம்.
முதலில், வருடம் முழுவதும் ஒரே ஷாம்புவைப் பயன்படுத்தாமல், குளிர்காலத்தில் கூந்தலின் வறட்சிக்கு ஏற்ற உட்பொருட்களைக் கொண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். மற்ற பருவங்களைவிடக் குளிர்காலத்தில் தலைக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது மிகவும் முக்கியம்; இது உச்சந்தலை வறட்சி அடையாமல் தடுக்கும்.
மேலும், உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்க, வெதுவெதுப்பான தேங்காய் அல்லது நல்லெண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். செம்பருத்திப் பூ மாஸ்க். முடியை வலுவாக்கும் கறிவேப்பிலை ஹேர் பேக், மற்றும் சாதம் வடித்த கஞ்சியைத் தடவுதல் ஆகியவை முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள் ஆகும். இந்த எளிய குறிப்புகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் குளிர்கால முடி உதிர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரியதர்ஷினி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மகப்பேறு…
ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதல், சர்வதேச…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது எழுந்துள்ள தொடர் சர்ச்சைகள், கட்சியின் மேலிடத்தை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.…
நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்…
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…