விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் தினேஷ். தற்பொழுது இவர் பிக் பாஸ் வீட்டில் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள், தங்கள் வாழ்க்கையில் தடுமாறச் செய்த விஷயம் குறித்து டாஸ்க் ஒன்றைக் கொடுக்க போட்டியாளர்கள் கண்கலங்கியபடி நேற்று முன்தினம் பேசியிருந்தனர்.
இதில் தினேஷ், ரச்சிதாவை பிரிந்துள்ளது குறித்து மனம் திறந்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் அதிரடி ட்விஸ்ட்களைக் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கெனவே ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தது மட்டுமல்லாமல், இப்போது எக்ஸ் போட்டியாளர்கள் மூன்று பேரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார்கள். இவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றால் மட்டுமே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர முடியும் எனவும் ரூல் போட்டுள்ளார் பிக் பாஸ்.
இதனையடுத்து, தங்கள் வாழ்க்கையைத் தடுமாற செய்த விஷயத்தை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாயா தனக்கு ஏடிஹெச்டி உள்ளது பற்றி கூறியிருந்தார். ஜோவிகா தனது பாட்டி மறைவு பற்றி அழுது கொண்டே பேச, தினேஷ் ரச்சிதா பிரிவு பற்றி பேசியிருந்தார். அதில், ‘நானும் என் மனைவியும் மன அழுத்தத்திற்குள் போய், இதுவரையிலும் இருவரும் விட்டுக் கொடுக்க முடியாமல் உள்ளோம். இதுவரையில் இந்த விஷயத்தை நான் எதிர்கொண்டுதான் உள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தினேஷ் பதிவு செய்த அன்றே நடிகை ரக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில், வெள்ளை உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ The cure of pain is in the pain . The ultimate truth of life. Spiritually reboot. Unplug nd refresh ur soul. “It’s wen u have a lot to say, but being calm nd silent is d option you choose. ANBAE SHIVAM ‘ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…