விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் தினேஷ். தற்பொழுது இவர் பிக் பாஸ் வீட்டில் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள், தங்கள் வாழ்க்கையில் தடுமாறச் செய்த விஷயம் குறித்து டாஸ்க் ஒன்றைக் கொடுக்க போட்டியாளர்கள் கண்கலங்கியபடி நேற்று முன்தினம் பேசியிருந்தனர்.
இதில் தினேஷ், ரச்சிதாவை பிரிந்துள்ளது குறித்து மனம் திறந்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் அதிரடி ட்விஸ்ட்களைக் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்கெனவே ஐந்து போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தது மட்டுமல்லாமல், இப்போது எக்ஸ் போட்டியாளர்கள் மூன்று பேரும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வர இருக்கிறார்கள். இவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றால் மட்டுமே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர முடியும் எனவும் ரூல் போட்டுள்ளார் பிக் பாஸ்.
இதனையடுத்து, தங்கள் வாழ்க்கையைத் தடுமாற செய்த விஷயத்தை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாயா தனக்கு ஏடிஹெச்டி உள்ளது பற்றி கூறியிருந்தார். ஜோவிகா தனது பாட்டி மறைவு பற்றி அழுது கொண்டே பேச, தினேஷ் ரச்சிதா பிரிவு பற்றி பேசியிருந்தார். அதில், ‘நானும் என் மனைவியும் மன அழுத்தத்திற்குள் போய், இதுவரையிலும் இருவரும் விட்டுக் கொடுக்க முடியாமல் உள்ளோம். இதுவரையில் இந்த விஷயத்தை நான் எதிர்கொண்டுதான் உள்ளேன்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் தினேஷ் பதிவு செய்த அன்றே நடிகை ரக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில், வெள்ளை உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ The cure of pain is in the pain . The ultimate truth of life. Spiritually reboot. Unplug nd refresh ur soul. “It’s wen u have a lot to say, but being calm nd silent is d option you choose. ANBAE SHIVAM ‘ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…