தங்கத்துக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. விலை உச்சத்தில் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவது இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது . இதற்கிடையில் டிஜிட்டல் முறையில் டிஜிட்டல் கோல்ட் வாங்கும் போக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய பங்குச் சந்தை மேற்பார்வையாளர் அமைப்பு SEBI அறிவுறுத்தியுள்ளது.
அதாவது பதிவு செய்யப்படாத தளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள், தங்கம் சார்ந்த ETF-கள் மற்றும் Electronic Gold Receipts போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
