Categories: CINEMA

“இவ்ளோ ஆடம்பரமா திருமணம் செஞ்சுட்டு உடனே பிரிஞ்சதுனால”.. விவாகரத்து பற்றி பல வருடம் கழித்து மனம் திறந்த விஜே ரம்யா..!!

விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் ஒருவராக மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே ரம்யா. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை ரம்யா முதலில் தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்த இவர் மொழி, மங்காத்தா மற்றும் மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இப்படி பிசியாக இருந்த இவர் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி அபர்ஜீத் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் அவருடன் சேர்ந்து வாழ தனக்கே விருப்பம் இல்லாததாலும் எங்களது திருமண வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை நாங்கள் இருவருமே உணர்ந்ததால் சத்தம் இல்லாமல் பிரிந்து விட்டோம் என ரம்யா கூறியிருந்தார்.

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு ரம்யா தற்போது தனது விவாகரத்து பற்றி மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது, லட்சக்கணக்கில் செலவு செய்து மிக ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டு யாராவது bye சொல்லிவிட்டு பிரிந்து விட விரும்புவார்களா. ஆனால் அதற்கு ஒரு அழுத்தமான காரணம் ஏதாவது இருந்தால் கட்டாயம் இது தான் நடக்கும். என்னுடைய விவாகரத்திலும் இது போன்ற காரணம் இருந்தது.

உதாரணத்திற்கு ஆறு மாதங்கள் ஒரு  வேலை செய்துவிட்டு திடீரென எனக்கு போர் அடித்து விட்டது எனக் கூறிவிட்டு ஓய்வு எடுத்தால் ஏன் வீட்டில் இருக்கிறாய் என்ன காரணம் என அடுத்தடுத்து பல கேள்விகளை முன் வைப்பார்கள். அதனைப் போலவே திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிவிட்டாலும் சரி உடல் எடை குறைந்துவிட்டாலும் சரி ஏனென்றால் நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி வாழ்க்கையில் தொடர்ந்து அடுக்கடுக்கான பிரச்சனைகள் இருக்கும் என ரம்யா மனம் திறந்து பேசி உள்ளார்.

Nanthini
Nanthini

Recent Posts

முதல்ல நயன்தாரா இல்லைன்னு சொன்னாங்க இப்ப த்ரிஷாவும் இல்லையா..? அந்த நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்ஜே பாலாஜி..!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மாசாணி அம்மன் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சமந்தா…

20 நிமிடங்கள் ago

அஜித் கொஞ்சம் கூட யோசிக்காம அதை பண்ணாரு.. நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்த நடராஜன்..!!

பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று…

22 நிமிடங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவின் கன்னத்தை பிடித்து பிரபு சொன்ன விஷயம்.. பிரபுவா அப்படி சொன்னாரு..? அது இன்னைக்கு வரைக்கும் மாறவே இல்ல..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

40 நிமிடங்கள் ago

உண்மைய சொல்லாம என்ன ஏமாத்திட்டீங்க… சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் சசிகுமாரிடம் அழுத ஸ்வாதி- அப்படி என்ன மறைத்தார் தெரியுமா?

2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…

2 மணி நேரங்கள் ago

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

3 மணி நேரங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

4 மணி நேரங்கள் ago