Categories: சினிமா

I Wish.. You Wish..? சிறுவயதில் பிரதமர் இந்திரா காந்திக்கு Letter எழுதிய விவேக்.. அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட்..!!

Spread the love

ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் கடந்த 1987 ஆம் ஆண்டு ரிலீசான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் ஃபிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருதுகளை வென்றுள்ளார். விவேக்கின் காமெடி கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

கேளடி கண்மணி, காதல் மன்னன், கண்ணெதிரே தோன்றினாள், உனக்காக எல்லாம் உனக்காக, ஆசையில் ஒரு கடிதம், பெரிய இடத்து மாப்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் விவேக் நடித்துள்ளார். நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்தபோது விவேக் சிறுவனாக இருந்தார். விவேக் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோருக்கு நவம்பர் 19-ஆம் தேதி தான் பிறந்தநாள். இந்நிலையில் விவேக் சிறுவனாக இருக்கும்போதே ஆங்கிலத்தில் My Birthday your birthday same. Birthday I wish you. You wish me? என இந்திரா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதனை பார்த்த இந்திரா காந்தி சிறுவனாக இருந்த விவேக்கிற்கு பதில் அனுப்பியுள்ளார். அந்த பதில் கடிதம் தபாலில் வராமல் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதம் என்பதால் கலெக்டர் தனிப்பட்ட கவனம் எடுத்து அந்த கடிதத்தை சம்பந்தப்பட்டவரிடம் கொண்டு சேர்க்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அப்போது விவேக் குடும்பத்தினர் குன்னூர் மலைப்பகுதியில் இருந்தனர்.

இதனால் கலெக்டர் உத்தரவை நிறைவேற்றுவதற்காக குதிரையில் கடிதத்தை கொடுக்க தேடி வந்தனர். உடனே பயந்து விவேக் ஆப்பிள் தோட்டத்தில் ஒளிந்து கொண்டார். விவேக்கின் தாயார் தனது மகனை அழைத்து வந்த போதுதான் அந்த கடிதம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அனுப்பியது என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில் அவரும் விவேக்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தை விவேக் பத்திரமாக வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

admin

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

5 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

15 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

22 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

40 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

43 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago