Categories: சினிமா

நன்றிக்கடன் மறந்தாரா விஷால்..? மிஷ்கினுக்கு ஆப்பு வைக்க போடும் மாசற்ற பிளான்.. குருவோடு பாவம் சும்மா விடுமா..?

Spread the love

நடிகர் விஷால் நடித்த பல படங்களில் சில படங்கள் மட்டுமே அவரது பெயர் சொன்ன படங்களாக அமைந்தன. அதில் மிக முக்கியமானது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன். அந்த படத்தில் டிடெக்டிவ் கணியன்பூங்குன்றன் கேரக்டரில் விஷால் வாழ்ந்திருப்பார்.

அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் துப்பறிவாளன் 2 படம் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பதாக இருந்தது. லண்டனில் இந்த படப்பிடிப்பு நடந்த போது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டதால் அந்த படம் அப்படியே நிறுத்தப்பட்டது. ஆனால் அது விஷால் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

இதற்கிடையே துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்கி, ஹீரோவாக நடிக்கிறேன் என பல ஆண்டுகளுக்கு முன்பே விஷால் பகிரங்கமாக அறிவித்தார். அவர் தொடர்ந்து அவர் நடித்த படங்கள், தியேட்டர் ஆபரேட்டரே கண்ணை பொத்திக்கொள்ளும் அளவுக்கு மிக மோசமாக இருந்ததால், அவரது படம் இயக்கும் திட்டம் தள்ளிப் போனது.

இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி, விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் உண்மையில் இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய காரணம், அந்த படத்தில் இன்னொரு நாயகனாக நடித்திருந்த எஸ்ஜே சூர்யா என்னும் நடிப்பு அரக்கன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ள நடிகர் விஷால், இப்போது லண்டன் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்புக்கான லொகேஷன் பார்க்கச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்பு, அங்கு துப்புறிவாளன் 2 படத்தை இயக்கவும், அவரே நடிக்கவும் முடிவு செய்துள்ளார். படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் இந்த படம் வெளிவந்த பிறகுதான் மிஷ்கின் சிறந்த இயக்குநரா, அல்லது விஷால் சிறந்த இயக்குநரா என்பது தெரிய வரும். அதேவேளையில் பெரும்பாலான வெற்றிப் படங்கள் 2ம் பாகமாக வெளிவரும்போது தோல்வி படங்களாக இருக்கின்றன. முதலில் விஷால் அதில் ஜெயிக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் முதல் படத்தை ஹிட்டாக்கி கொடுத்த மிஷ்கின் இல்லாமல் 2ம் பாகம் எடுப்பதும் விஷாலின் நன்றி மறந்த ஒரு செயலாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 மணத்தியாலம் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

1 மணத்தியாலம் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 மணத்தியாலம் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

1 மணத்தியாலம் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

1 மணத்தியாலம் ago