Categories: சினிமா

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷை பெண் கேட்டுச் சென்ற இயக்குனர் லிங்குசாமி… அதற்கு கீர்த்தி என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

Spread the love

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் மோகன் மற்றும் நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ். தன்னுடைய அம்மாவிற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக அறிமுகமானது மலையாள மொழியில் தான். தமிழ் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படத்திற்கு பிறகு சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த நிலையில் இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

பிறகு தமிழில் மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த கீர்த்தி சுரேஷ் தளபதி விஜய்க்கு ஜோடியாக இரண்டு முறை ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவரை தென்னிந்திய திரை உலக முழுவதும் பிரபலமாகியது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்ட மகா நடிகை திரைப்படம் தான். இந்த திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இறுதியாக பேபி ஜான் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கீர்த்தி சுரேஷ் தனது காதலரை கரம் பிடித்தார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் விஷாலுக்காக கீர்த்தி சுரேஷ் பெண் கேட்டு சென்ற சம்பவம் குறித்த இயக்குனர் லிங்குசாமி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஷாலுக்கு கீர்த்தியை பெண் கேட்டு சொல்லுங்கள் என்று விஷாலின் அப்பா என்கிட்ட சொன்னாரு. நான் கீர்த்தி கிட்ட போய் நின்றதும், என்ன சார் இவ்வளவு தூரம் என்று கேட்டார்கள். அப்போ அவங்க கிட்ட விஷால் பற்றி நான் சொன்னதும், ஸ்கூல் படிக்கும்போது இருந்து இருக்கின்ற காதல் பற்றி கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக சொன்னாங்க. அவர்தான் இப்போ கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கீர்த்தியோட வெற்றிக்கு பெரிய பின்புலம் அந்தப் பையன் தான். கீர்த்தியின் மூன்று நாள் திருமணத்திற்கு நானும் சென்றிருந்தேன். மிகவும் நெருங்கிய நண்பர்களை மட்டும் தான் அழைத்து இருந்தார்கள் என்று இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

“என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”… தோழிகளுக்கு கதறி அழுது ஆடியோ அனுப்பிவிட்டு மாணவி எடுத்த விபரீத முடிவு… கல்லூரியில் நிகழ்ந்த கோர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்படும் தனியார் செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி…

10 minutes ago

கெஞ்சிய கர்ப்பிணி பெண்…. நள்ளிரவில் கொடூரமாக கொன்ற 21 வயது காதலன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஐதராபாத் நகரம் பாலாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் பெண்…

15 minutes ago

திடுக்கிடும் திருப்பம்..! கண்மாயில் கொடூர சம்பவம்… போலீசாரையே குழப்பும் மர்மக் கொலை… நடுங்க வைக்கும் பின்னணி…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி கிராமத்தில் உள்ள கொந்தகை கண்மாயில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத…

18 minutes ago

“தாய்க்கு அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ்…” மனைவியை கொன்று தற்கொலை செய்த பொறியாளர்…? பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராஜகோபால் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த சிவில் பொறியாளரான சுமந்த் ஜெயின்…

22 minutes ago

ரூ.10 லட்சம் கோடி கடன் சுமை… தவெக அரசின் அதிரடி பிளான்…. கோயில் நிலங்களில் சோலார் மின்திட்டம்…. மாஸ் காட்டும் முதல்வர் விஜய்….!

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்து வருவாயைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சிப் திட்டங்களுக்காக முந்தைய…

26 minutes ago

“நாளைக்கு ஆபரேஷனும் பண்ண சொல்வீங்களா…? டாக்டருக்கு பதில் செக்யூரிட்டி…” நோய்டா அரசு மருத்துவமனையில் ஊசி மருந்து நிரப்பிய காவலாளி….! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டா செக்டார் 39-ல் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அருகே…

30 minutes ago