2026 ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், விராட் கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தினார்.
தற்போது சி.எஸ்.கே. அணிக்கு எதிராக மட்டும் கோலி 1,188 ரன்களை விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1,161 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். மேலும், இந்தப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி மூன்றாம் இடத்திலும் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆர்.சி.பி. அணி ஆதிக்கம் செலுத்தியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 250 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. அணி அபார வெற்றி பெற்றது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…