ஐபிஎல் போட்டியில் இருந்து விராட் கோலி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. RCB ணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்டு ஒன்று விராட் கோலியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளதாம். ஆனால் பிற வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அவர் அறிவுறுத்தியுள்ளாராம். அடுத்த மெகா ஏலம் நடக்கும்போது அவருக்கு 38 வயதாகி இருக்கும். இதனால் இன்னும் இரண்டு சீசன்களில் மட்டுமே அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்தச் செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
