Categories: சினிமா

தவிர்க்க முடியாத இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன் எப்படி சினிமாவில் நுழைந்தார் தெரியுமா?.. பலரும் அறியாத சுவாரசிய சம்பவம்..!

Spread the love

நெற்றி முழுவதும் திருநீறு பட்டை, குங்கும பொட்டு, கையில் வயலின் அப்படி என்றால் உடனே சிந்தையில் தோன்றும் ஒரே கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் தான். தற்போது இருக்கும் தூகே இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமா மட்டுமல்ல இசையால் கூட தவிர்க்க முடியாத கலைஞர் இந்த குன்னக்குடி வைத்தியநாதன். அனைத்து பாடல்களையும் தன்னுடைய கையில் இருக்கும் வயலின் மூலம் வார்த்தைகளால் உச்சரித்து பாடுவது போலவே இசையமைத்து காட்டும் திறமை கொண்ட ஜாம்பவான். 12 வயது முதலே இசை கச்சேரிகளில் பங்கேற்க தொடங்கினார்.

பாடல்கள் மட்டுமல்லாமல் மிருகங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் ஓசைகளையும் தன்னுடைய வயலின் மூலம் வாசித்துக் காட்டும் திறமை கொண்டவர். வா ராஜா வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் திருமலை தென்குமரி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை பெற்றார். இவர் பல திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் சிறந்த கலைஞராக விளங்கிய இவ்வாறு சினிமாவில் அறிமுகமான சுவாரசிய சம்பவம் பலரும் அறியாதது தான். தமிழ் சினிமா உலகம் எத்தனையோ திறமையாளர்களை சந்தித்துள்ளது.

அப்படி சினிமாவில் சாதித்தவர்களில் யாருடையாவது வாழ்க்கை வரலாற்றை உன்னை பார்க்க கவனித்து பார்த்தால் அவர்கள் சினிமாவில் நுழைவதற்கு யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள். அப்படி இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் தமிழ் சினிமாவின் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியவர் வெங்கட்ரமணராவ் வென்ற வித்துவான் தான். குன்னக்குடி வைத்திய நாதனை பொருத்தவரை வயலின் வாசிப்பதில் அவருக்கு எந்த அளவிற்கு ஆர்வம் இருந்ததோ அந்த அளவிற்கு சினிமா மீதும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அந்த காலகட்டத்தில் பல கலைஞர்களுக்கு வயலின் வாசிக்கும் வாய்ப்பை பெற்றவர் தான் குன்னக்குடி வைத்தியநாதன்.

என்னதான் பல வித்துவான்களுக்கு வாசித்தாலும் பணம் சம்பாதிக்க வேண்டும், வாழ்வில் உயர வேண்டும் என்றால் அதற்கு சினிமா தான் சரியான வழி என்று குன்னக்குடி வைத்தியநாதனுக்கு எடுத்துக் கூறியவர் வெங்கட் ரமணா ராவ் தான். அவரின் அந்த அறிவுரையை ஏற்று உடனடியாக மாடர்ன் தியேட்டருக்கு புறப்பட்டார் குன்னக்குடி வைத்தியநாதன். அங்கு சென்று இசைப் பள்ளியில் சேர வேண்டும் என்று அவர் கூறியதும் அங்கிருந்த ஒருவர் இங்கு இருக்கும் குரு ஒருவர் நீங்கள் வயலின் வாசிப்பதை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் சேர்த்துக் கொள்வார் என்று கூறினார்.

அப்போது மாடர்ன் தியேட்டரில் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் ஜி ராமநாதன். அவர் முன்பே போய் குன்னக்குடி வைத்தியநாதன் நின்றதும் எங்கே வாசி பார்க்கலாம் என்று கூறினார். அப்போது ஜி ராமநாதனுக்கு பிடித்த ஒரு ராகத்தை எதிர்பாராத விதமாக குன்னக்குடி வைத்தியநாதன் தன்னையே அறியாமல் வாசித்து விட்டார். உடனே அது ராமநாதனுக்கு பிடித்து போக அன்று குன்னக்குடி வைத்தியநாதனுக்காக கதவுகள் மாடர்ன் தியேட்டரில் திறக்கப்பட்டது. அதன் பிறகு பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக வளர்ந்தார் என்றால் அதற்கு வித்திட்டது அன்று நடந்த அந்த சம்பவம் தான்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago