CINEMA
“அக்கா-னு என்னை கூப்பிட்ட நீ, இப்படித்தான் என்னை பாப்பியா..?” பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த வினுஷா அதிரடி கேள்வி..
விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பான சீரியல்களில் பாரதி கண்ணம்மா மிக முக்கியமானது. இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்தவர் வெளியேறி விட, அவரது கேரக்டரில் ஏறக்குறைய அவரை போன்ற தோற்றம் கொண்டவராக நடித்தவர் தான் வினுஷா. இதில் தன் மீது சந்தேகப்படும் டாக்டர் கணவர் பாரதியை எதிர்த்து, தன் பெண் பிள்ளைகளை தனி ஒரு பெண்ணாக காப்பாற்றும் ஒரு புரட்சிக்கர பெண்ணாக தன் நடிப்பை தந்து பாராட்டை பெற்றவர் வினுஷா.இந்நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல், ஒரு போட்டியாளராக பங்கேற்றக வினுஷா, சில வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்குபிடித்தார். கடந்த வாரத்தில் குறைவான ஓட்டுகளைப் பெற்ற நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார் வினுஷா.பிக்பாஸ் வீட்டுக்குள் கண்டென்ட் தேவைக்காக தினமும் யாரையாவது குறிவைத்து பிரச்னை செய்கின்றனர். அப்படி மீரா, பிரதீப், நிக்ஸன் போன்றவர்களை சொல்லலாம். அதிலும் வெளியே வந்த பிறகு சில வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பார்த்தேன், என்னிடம் அக்கா, அக்கா என்று கூப்பிட்டு பேசிய நிக்ஸனை நானும் தம்பியாக தான் பார்த்தேன்.
ஆனால் அவன் என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறான். முகம் சரியில்லை, ஷேப் சரியில்லை என பேசி இருக்கிறான். அக்கா என்று மென்சன் பண்ணி பேசி பழகிய ஒருவரை இப்படி பேசுவியா, உன் அக்காவை இப்படித்தான் பேசுவியா, அக்காவை நீ அப்படித்தான் பார்ப்பியா என்ற கேள்விதான் எனக்குள் வந்தது, என்று கூறி இருக்கிறார்.