“சூனியம் வச்சிட்டாங்க” சந்தேகத்தில் தம்பதியரை உயிரோடு எரித்து கொன்ற கிராமத்தினர்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

அசாம் மாநிலம் கார் பி அன்லாங் மாவட்டத்தில், சூனியம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தம்பதியினர் கிராம மக்களால் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதியினரை வீட்டிற்குள் வைத்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய கும்பல், பின்னர் வீட்டிற்குத் தீ வைத்ததில் இருவரும் உயிருடன் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தம்பதியினரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூடநம்பிக்கையால் தூண்டப்பட்ட இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நவீன காலத்திலும் நிலவும் சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.