திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலராக முத்துலட்சுமி என்பவர் வேலை பார்க்கிறார். கரடிவாவி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி வடுகபாளையத்தில் நிலத்திற்கு பட்டாவில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தார். அதற்கு முத்துலட்சுமி 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து கிருஷ்ணசாமி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.
கிருஷ்ணசாமி பணம் தருவதாக முத்துலட்சுமியிடம் கூறினார். அவர் தனது வடுகபாளையம் வீட்டுக்கு வரச் சொன்னார். கிருஷ்ணசாமி அங்கு சென்று 20 ஆயிரம் ரூபாய் பணத்தை முத்துலட்சுமியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துலட்சுமியை கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…