Connect with us

இறுதி வாரத்தின் நடுவில் அவசர அவசரமாக நடந்த எவிக்ஷன்.. 6 பேரிலிருந்து ஒருவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ்..

TRENDING

இறுதி வாரத்தின் நடுவில் அவசர அவசரமாக நடந்த எவிக்ஷன்.. 6 பேரிலிருந்து ஒருவரை வெளியே அனுப்பிய பிக் பாஸ்..

 

விஜய் டிவி நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் பேசப்படும் ஷோவாக  பிக் பாஸ் உள்ளது. இந்த பிக் பாஸ் நிகழிச்சியில் தற்போது   சீசன் 7  நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின்  இறுதி கட்ட வாரம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் யார் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த வாரத்தில் நடுவார  எவிக்ஷன் நடைபெற்று விஜய் வர்மா அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதலில் முரட்டுத்தனமான போட்டியாளராக இருந்த விஜய் வர்மாக்கு  மஞ்சள் ஸ்ட்ரைக் கார்டு கொடுக்கப்பட்டது. அதன் பின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  வெளியேற்றப்பட்டார். மக்களின் கருத்தை நன்கு தெரிந்து கொண்ட விஜய் வர்மா, அதன் பின்பு வைல்ட் கார்டு போட்டியாளராக  மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

மாயாவிற்கு தான் கமலும் விஜய் டிவியும் சப்போர்ட் செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு வீட்டிற்குள் வந்ததும் விஜய் வர்மா  மாயா கூட்டணியில்  மெல்ல சேர்ந்தார். மேலும் மாயாவிற்கு சப்போர்ட் செய்வதும் அவருக்கு ஆதரவாகவே பேசி வருவது என வெளிப்படையாகவே தெரிந்த  இவரை நெட்டிசன்கள் பலரும் மீம்ஸில் கலாய்த்து தள்ளுகின்றனர்.

இந்த நிலையில், இறுதி  வாரத்தில்  நடுவார எவிக்ஷன் நடைபெறும் என ஏற்கனவே தெரிந்த  நிலையில்  விஜய் வர்மா சற்றும் எதிர்பாராத விதமாக வெளியேறினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு  மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில்  யார் டைட்டில் வின்னர் என்று மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.  மேலும் இந்த வாரத்தில் மீண்டும் ஒரு எவிக்ஷன் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top