திருவள்ளூர் தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி சத்திய நாராயணன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து பேனரில் தமிழக வெற்றிக்கழகம் பூண்டி ஒன்றிய செயலாளர் போட்டோ இடம்பெறாததால் சத்தியநாராயணனை தொடர்பு கொண்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
முன்னதாக கட்சியில் தனக்கு பொறுப்பு வழங்கவில்லை என விரக்தியில் இருந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிர்வாகிகள் சோக நிகழ்வுகளால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
