சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் அதற்கு இல்லை. காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்ற போதிலும், பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால், பெரும்பான்மையை நிரூபித்த பிறகு பதவியேற்கலாம் என ஆளுநர் அறிவுறுத்தியதால், இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜய் தரப்பு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதே மரபு என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் “பெரும்பான்மையை என்னிடம் நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன்” என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது விஜய்க்கு அளிக்கப்படும் மறைமுக அரசியல் அழுத்தம் என தவெகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மே 8-ஆம் தேதி ராசி இல்லாத எண் என்றும், மே 9 முதல் 12 வரை அஷ்டமி, நவமி மற்றும் செவ்வாய்க்கிழமை போன்ற காரணங்களால் பதவியேற்பு நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, முகூர்த்த நாளான மே 13-ஆம் தேதி (புதன்கிழமை) விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் தேவையான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட தவெக தீவிரமாக முயன்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…
திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…
தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…
35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல…
தமிழக அரசியலில் தற்போதைய பரபரப்பான சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் தனது முகநூல் பதிவின் மூலம்…