தந்தையை அழைக்காமல் தனது படத்தின் பூஜையை தொடங்கிய விஜய் மகன்.. உள்ளூரில் இருந்துகொண்டே அப்பாவை அழைக்காதது ஏன் என எழுந்த கேள்வி…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு ஜேசன்  சஞ்சய் என்ற மகன் உள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

   

இவர் சினிமா துறை சார்ந்த படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். இதை தொடர்ந்து அவர் சினிமாவில் விரைவில் காலடி எடுத்து வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது தந்தையைப் போல ஹீரோவாக அல்லாமல் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம். அந்த படத்துக்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை லைகா நிறுவனம் டிவிட்டரில் பக்கத்தில்பகிர்ந்திருந்தது.

இந்தநிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் பூஜையை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சய் முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பூஜையில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லையாம். அதோடு மட்டுமின்றி அவருக்கு இந்த விஷயம் தெரியுமா? இல்லை அவரிடம் இதை பற்றி சொல்லவே இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விகளும் எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.