தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்கி தீவிரத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் அவர், சமீபத்தில் மேற்கொண்ட நேரடிப் பிரச்சாரங்களின் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஏற்பட்ட கடும் நெரிசலால் பாதுகாப்புச் சிக்கல்கள் உருவானதோடு, சில இடங்களில் விபத்துகளும் நிகழ்ந்தன. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தனது ஒரு சில பிரச்சாரப் பயணங்களைப் பாதியிலேயே ரத்து செய்த விஜய், தற்போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் தனது வியூகத்தை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, கூட்ட நெரிசலைக் குறைக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ‘ஆன்லைன் பிரச்சார’ முறையை விஜய் கையில் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் சுமார் 20 நிமிடங்கள் வரை இணையதளம் வாயிலாகப் பேசி, அதனை மாநிலம் முழுவதும் உள்ள தவெக பிரச்சாரக் கூட்டங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. “விஜய்யை நேரில் காண வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது” என்பதில் கட்சித் தலைமை உறுதியாக உள்ளது. இந்த புதிய ஆன்லைன் நடைமுறை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் வரை மட்டுமே நேரடிப் பிரச்சாரங்கள் தொடரும் என்றும், அதன் பின்னர் டிஜிட்டல் முறைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும் இது குறித்த இறுதி முடிவை விஜய் விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் மிக முக்கியத் துறைகளான…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…
தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…
சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…