CINEMA
கேப்டன் விஜயகாந்த் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் திரைப்படம் எது தெரியுமா..?
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், செந்தூரப்பூவே, பூந்தோட்ட காவல்காரன் வானத்தைப்போல உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
அவருக்கு இரண்டு பிலிம் பேர் விருதுகளும், மூன்று தமிழக அரசின் திரைப்பட விருதுகளும் கிடைத்துள்ளது. மிக உயரிய விருதான கலைமாமணி விருது கடந்த 2001-ஆம் ஆண்டு விஜயகாந்த்துக்கு கொடுக்கப்பட்டது. கேப்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.
நடிப்பு மட்டும் இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வதிலும் கேப்டனை மிஞ்ச முடியாது. அவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த உதவிகள் ஏராளம். திரையுலகில் இன்று பயணிக்கும் முக்கிய நட்சத்திரங்களின் வாழ்கையில் திருப்பு முனையாக அமைந்தவர் விஜயகாந்த். சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த் முதன்முதலாக அதிக சம்பளம் வாங்கியது எந்த படத்திற்கு தெரியுமா?
கடந்த 1987-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் ரிலீசான கூலிக்காரன் திரைப்படத்திற்கு தான் விஜயகாந்த் முதன்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தை ராஜசேகர் இயக்கினார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்தார். விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் விஜயகாந்தின் மார்க்கெட் வேல்யூ 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை உயர்ந்தது கோட்படத்தக்கதாகும்.