படம் ஓடாது என்று தெரிந்த உடனே விஜயகாந்த் செய்த காரியம்.. அதான்டா எங்க கேப்டன்..!!

By admin on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த். இதுவரை சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். ஏராளமான ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழக அரசின் விருதுகள், கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை விஜயகாந்த் தன்வசம் ஆக்கியுள்ளார்.

   

கடந்த 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி கட்சியின் நிறுவனத் தலைவராக பொறுப்பேற்றார். வைதேகி காத்திருந்தாள், பூந்தோட்ட காவல்காரன், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், ஆனஸ்ட் ராஜ், புலன் விசாரணை, வானத்தைப்போல, தவசி, ரமணா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார்.

   

 

தனது உணர்ச்சி பூர்வமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சினிமாவில் விஜயகாந்த் போல நல்ல உள்ளம் படைத்தவர்கள் அரிதாகவே இருக்கின்றனர். சினிமாவிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பலரது வாழ்க்கையில் விஜயகாந்த் ஒளியேற்றி வைத்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். அந்த படத்தின் ஷூட்டிங் மூன்றாவது நாள் போய்க்கொண்டிருந்த போதே படம் ஓடாது என விஜயகாந்த்துக்கு தெரிந்து விட்டது.

அவர் பட குழுவினரை அழைத்து கதையின் போக்கு வேறு எங்கோ செல்கிறது. இந்த படம் ஓடாது என கூறியுள்ளார். மேலும் தான் பேசிய சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு பட குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். சில நாட்கள் கழித்து படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. விஜயகாந்த் நினைத்தபடி அந்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் தான் பேசியபடி பாதி சம்பளத்தை மட்டும் தான் விஜயகாந்த் வாங்கினாராம். இந்த தகவலை பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.