Categories: சினிமா

“படத்துல அந்த சீன் ரொம்ப முக்கியம்”.. வில்லன் கால் தொட்ட விஜயகாந்த்.. கொந்தளித்த ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கலக்கியவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்ற விஜயகாந்த் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி பலரும் அறியாத ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் தவசி. இந்த திரைப்படத்தில் சௌந்தர்யா நாயகியாக நடித்திருப்பார். வடிவேலு மற்றும் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை உதயசங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக இயக்குனர் உதயசங்கர், தவசி திரைப்படத்தில் ஒரு முக்கியமான சீன் இருப்பதாகவும் அதில் வில்லன் காலை விஜயகாந்த் தொட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு எந்த வில்லன் சரியாக இருப்பார் என்று கேப்டன் ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து இயக்குனர் உதயசங்கர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தில் அந்த சீன் முக்கியம் என்றும் அதற்கு விஜயகாந்த் ஒப்பு கொண்டதாகவும் இயக்குனர் தெரிவித்த நிலையில் உடனே ரசிகர் மன்ற தலைவர்கள் அனைவரும் இணைந்து அந்த கதாபாத்திரத்திற்கு பொன்னம்பலம் சரியாக இருப்பார் என்று கூறியும் விஜயகாந்த் க்கு பொன்னம்பலம் சரியான வில்லன் என்றும் கூறினர். இதனைத் தொடர்ந்து தவசி திரைப்படத்தில் பொன்னம்பலம் காலை தொட்டு கழுவும் காட்சியில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

2 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

2 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

3 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

3 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

3 மணத்தியாலங்கள் ago