தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு குடி பெயர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் அவரின் கருமை நிறமும் தோற்றமும் அவருக்கு அவ்வளவு எளிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை.
ஆரம்பத்தில் பல நிராகரிப்புக்கு பிறகுதான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திய விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அது தவிர அவரது நண்பர் ராவுத்தருடன் இணைந்தார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த பல திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார்.
கேப்டன் பிரபாகரன், ஆனஸ்ட்ராஜ் போன்ற போலீஸ் கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார் விஜயகாந்த். கூர்மையாக பார்க்கும் அவரது கண் மிகவும் பிரபலமானது. இது மட்டுமல்லாமல் விஜயகாந்த் மிகவும் நல்ல மனம் கொண்டவர். அனைவருக்கும் உதவுபவர். தன்னை தேடி வருபவர்கள் சாப்பாடு இல்லாமல் அனுப்பவே மாட்டார். எல்லோரையும் சாப்பிட வைத்து அனுப்புவார்.
அதுமட்டுமல்லாமல் திறமையானவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தந்து ஊக்குவித்தவர் விஜயகாந்த். அப்படி விஜயகாந்த் வாய்ப்பு வாங்கி கொடுத்து முன்னுக்கு வந்தவர்தான் வடிவேலு. வடிவேலு முன்னேற தடையாக இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவளித்து சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற்று தந்தவர் விஜயகாந்த். ஆனால் பின்னாளில் வடிவேலுவே விஜயகாந்த்தை மறந்து போனது வேறொரு கதை.
அப்படி ஒரு முறை விஜயகாந்த் வடிவேலுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அந்த சம்பவம் என்னவென்று இனி காண்போம். வடிவேலுடன் பல திரைப்படங்களில் நடித்தவர்தான் காமெடி நடிகர் ஜெயமணி. அப்போது ஒரே ஒரு விஷயத்துக்காக வடிவேலு போன் செய்து ஜெயமணியை மிரட்டி இருக்கிறார். உடனே இதை விஜயகாந்த் அவர்களிடம் கூறியிருக்கிறார் ஜெயமணி. வடிவேலுக்கு போன் செய்து என்ன மெரட்டிட்டு இருக்கியாமே என்று திட்டியிருக்கிறார். அதே பக்கம் ஜெயமணி மற்றும் ஜெயமணியின் மனைவியிடமும் போன் செய்து வடிவேலு இப்படி செய்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று கேட்டிருக்கிறார் விஜயகாந்த். அப்படி ஒரு தங்க மனசுக்கு சொந்தக்காரர் தான் விஜயகாந்த்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…