ஆத்தாக்கள் வாக்கு இரட்டை இலைக்குத்தான்… இல்லையென்றால் தலையணை வச்சு அமுக்கி முடிச்சி விடுங்க… விஜயபாஸ்கர் சர்ச்சை பேச்சு..!!

Spread the love

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வாக்காளர்களைக் கவரும் வகையில் பேசிய சில வார்த்தைகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு வழங்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டாலும், வாக்கு என்பது இரட்டை இலைக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே (NDA) விழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பக்கத்து வீடு, அடுத்த வீடு என எல்லா வீடுகளிலும் உள்ள ஆத்தாக்களை (பெண் வாக்காளர்கள்) எல்லாம் கரெக்ட் செய்து விடுங்கள். கபக்கென்று அமுக்கிப் போட்டு விடுங்கள்… இல்லையென்றால் தலையணை வைத்து முடித்து விடுங்கள்” எனப் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், தான் ‘கணக்கு வழக்குகளைச்’ சொன்னதாகவும், வேறு எதையும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் உடனேயே விளக்கமளித்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசியல் நாகரிகம் இன்றிப் பேசுவதாக திமுக உள்ளிட்ட மாற்றுத் தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

8 seconds ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

2 minutes ago

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

3 minutes ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

6 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

8 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

9 minutes ago