நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி ”பருத்திவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது படமாக அவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து பிரபலமானார்.
சிறந்த கதை தேர்வு, அருமையான நடிப்பு என மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் கார்த்தி. இவர் நடிப்பில் மட்டும் இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து ‘ குக்கூ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதைத்தொடர்ந்து அடுத்து தனது 26-வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் மேலும் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுவாதி கொண்டே நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.