தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு வழங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் கூகுள் ஃபார்ம் வாயிலாக இந்த ஒப்புதலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்த முடிவு எடுக்கப்பட்ட பின்னணியில், கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவுகள் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு தொகுதிக்கு சுமார் ரூ.5 கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டபோது, அவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வேட்பாளர்கள் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் நிதி மற்றும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணியின் போது தங்களுக்கு மரியாதையான தொகுதிப் பங்கீடு கிடைக்க வேண்டும் என்பதோடு, விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்துள்ளனர். சீட் கிடைக்காத சூழலிலும், குறைந்தது 50 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆச்சரியமாக, சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் பாஜக கூட்டணியை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கும் விஜய், அங்கு பாஜக தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. இது வெறும் தேர்தல் கால கூட்டணி மட்டுமே என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யலாம் எனவும் கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தனது அரசியல் நகர்வுகளை மிக கவனமாக முன்னெடுத்து வரும் விஜய், நாளை டெல்லியில் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…