விஜய் டிவியில் பல வெற்றிகரமான தொடர்கள் வந்திருக்கிறது. அதில் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பையும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பதுதான் சிறகடிக்க ஆசை தொடர். நாயகன் குடும்பத்தாருடன் போடும் சண்டைகள் அன்றாட நிகழ்வுகள் போன்றவற்றை இந்த சிறகடிக்க ஆசை தொடர் கதை கொண்டு செல்கிறது.

இந்த சிறகடிக்க ஆசை தொடரில் நாயனாக வெற்றி வசந்த் நாயகியாக கோமதி, சல்மா அருண், சுந்தர்ராஜன் போன்றோர் நடித்திருக்கின்றனர். வெற்றி வசந்திற்கு விஜய் டிவியில் இதுதான் முதல் சீரியல். என்ன தான் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றினாலும் வெற்றி வசந்த் இந்த சிறகடிக்க ஆசை தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறார். பெண்களின் ஆதரவு இவருக்கு அதிகமாக உண்டு.
டி ஆர் பி எல் நம்பர் ஒன் ஆக திகழ்ந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். வெற்றி வசந்த்திற்கு ஏராளமான ரசிகர்கள் ரசிகைகள் இருக்கின்றனர். இவரை சின்ன திரையின் விஜய் சேதுபதி என்றும் அழைக்கின்றனர். விஜய் சேதுபதி போலவே இவர் தனது அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். முதல் தொடரின் மூலமாக பிரபலம் அடைந்திருக்கிறார் வெற்றி வசந்த்.

தற்போது நடிகர் வெற்றி வசந்த் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவர் திருமணம் செய்ய போகும் நபர் விஜய் டிவியின் பொன்னி தொடரில் நடிக்கும் நாயகி வைஷ்ணவி ஆவார். இது அவர் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இவர்களுக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மக்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
