தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். தற்போதைய நிலையில் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவு கடிதத்துடன் அவர் ஆளுநரைச் சந்திக்க உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஒருபுறம் ஆளுநருடனான சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மற்றொருபுறம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
