“வேட்பாளர் அவுட்.. ஆனா ஆட்டம் இருக்கு”… எடப்பாடியில் திடீர் திருப்பம்…. விஜய்யின் தவெக எடுத்த அந்த ஒரு முடிவு… ஆடிப்போன அரசியல் களம்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவெக சார்பில் களமிறக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது மனைவியின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், வாக்குப்பதிவிற்கு முன்பே அந்தத் தொகுதியில் தவெகவின் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த மனு நிராகரிப்புக்கு பின்னால் அரசியல் அழுத்தம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இதனை ஒரு “நம்பிக்கை துரோகம்” என பகிரங்கமாகச் சாடினார்.

வேட்பாளர் இல்லாத சூழலில், எடப்பாடி தொகுதியில் தவெக யாருக்கு ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி எழுந்தது. சில சுயேச்சை வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல், தவெகவினர் அனைவரும் நோட்டா (NOTA) சின்னத்திற்கு வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிரடி முடிவின் மூலம், எடப்பாடி தொகுதியில் தவெகவிற்கு இருக்கும் உண்மையான பலம் என்ன என்பதை நோட்டாவிற்கு விழும் வாக்குகளின் மூலம் நிரூபிக்க அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடியில், தவெகவினரின் இந்த “நோட்டா” முடிவு யாருடைய வெற்றியைப் பாதிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. விஜய்யின் கட்சி ஒரு தொகுதியில் களமிறங்கும் முன்பே முடக்கப்பட்டிருப்பது அக்கட்சியினருக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கட்சித் தலைவர் விஜய் தனது உரைகளில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை நேரடியாக விமர்சிக்காமல் தவிர்த்து வரும் சூழலில், சொந்தக் கட்சி நிர்வாகிகளே நோட்டாவிற்கு வாக்களிக்க முடிவெடுத்திருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. மற்ற தொகுதிகளில் தவெக தனது செல்வாக்கை எப்படிக் காட்டப்போகிறது என்பதும், எடப்பாடியில் நோட்டா பெறப்போகும் வாக்குகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே தெரியவரும்.

Nanthini

Recent Posts

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

1 minute ago

பகீர்!.. அண்ணிக்கு வந்த விபரீத கோபம்!. நாத்தனாரை தடியால் அடித்து கொன்ற கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…

7 minutes ago

“சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து வெற்றி” கார்ல்சனின் கோட்டையைத் தகர்த்த பிரக்ஞானந்தா… வியந்து பாராட்டிய ஆனந்த் மகிந்திரா..!!

2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…

10 minutes ago

பயிற்சியில் பாஸ் ஆனால் மட்டுமே பதவி… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை போட்ட அதிரடி கண்டிஷன்.. இடைத்தேர்தலிலும் அதிரடி முடிவு..!!

திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…

14 minutes ago

“கல்யாணம் வேணும்னா இதை செய்!”.. காதலி பெற்றோர் போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. காதலன் விபரீத முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…

16 minutes ago

“எல்லாத்துக்கும் திமுக தான் காரணமா..?” அப்புறம் ஏன் நீங்க ஆட்சியில் இருக்கீங்க..? எதிர்க்கட்சிகளை அதிரவைத்த மேயர் பிரியாவின் அதிரடி கேள்வி..!!

"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…

17 minutes ago