திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அண்மை காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்திருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், அறிவாலயத்திலிருந்து என்னை வசை பாடினார்கள். என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன். திமுகவின் அறிவு திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் நான் இணையவில்லை. பெரியார் மற்றும் அந்நாள் லட்சியங்களை பேசி வந்த நான் இன்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளேன்.
புதிதாக பிறந்ததைப் போல எண்ணி பூரிக்கிறேன். தமிழகத்தில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளது. பரப்புரை செய்வதற்கு விஜய் எனக்கு அனுமதி வழங்கியுள்ளார். என்னை இதுநாள் வரை முடக்கி வைத்திருந்தனர். இயக்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியுள்ளார். இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய் இடம் உள்ளது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…