நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை குழு தொடர்பான சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கியிருந்தது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், கடந்த பொங்கல் பண்டிகையின் போது படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. படக்குழுவினர் நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், உரிய தீர்வு கிடைக்காமல் இழுபறி நீடித்தது.
இந்த சூழலில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், நீதிமன்றத்தில் இருந்த வழக்கை வாபஸ் பெற்று, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) மறு ஆய்வுக் குழுவை அணுக முடிவு செய்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி (நாளை) ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை பிற்பகல் 2 மணிக்கு மறு ஆய்வுக் குழு முன்னிலையில் படம் திரையிடப்பட்டு, தணிக்கை சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்த மறு தணிக்கை வெற்றிகரமாக முடிந்து சான்றிதழ் கிடைத்தால், இந்த மாதமே படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், விரைவில் அறிவிக்கப்படவுள்ள தேர்தல் தேதி முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகலாம் என்பதால், அனைவரது பார்வையும் மறு தணிக்கை முடிவின் மீதே உள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு முன்பாக வெளியாகவிருந்த பிற முன்னணி படங்களின் வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதால், தற்போது படத்திற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. நாளை தணிக்கை குழு எடுக்கும் முடிவு, படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்யும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதோடு, படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் என்பவருக்கும், மன்னாந்தலை பகுதியைச் சேர்ந்த 36…
அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்…
மொஹாலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 30 வயதுப் பெண்ணான டிம்பிள், கடந்த வியாழக்கிழமை மாலை அவரது…
இந்தியாவின் கல்வித்துறையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் அச்சுறுத்தி வரும் நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு…
மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…