தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசியுள்ள கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. 2026-ல் விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும், அவர் கைகாட்டும் நபர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக (MLA) வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே விஜய் தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார் என்ற செய்தி உறுதி செய்யப்படும் என அவர் பேசியுள்ளார்.
மேலும், 234 தொகுதிகளிலும் விஜய்தான் வேட்பாளர் என்ற வகையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், அனைத்துத் தொகுதிகளிலும் தவெக அமோக வெற்றி பெறும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் மற்ற அனைத்துக் கட்சியினரும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும் என்றும், தமிழக மக்கள் விஜய்க்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தியுள்ளார்.
