தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தவெக கட்சித் தலைவர் விஜய் மதுரையில் 2-வது மாநாட்டை நடத்திருந்தார். நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரையில் நடந்த மாநாட்டைப் பற்றியும் பேசி உள்ளார். மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும் என்று வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி திருச்சியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்த இருக்கும் மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக சேருகிறார்கள் என்று பார்க்கலாம்.
முக்கியமாக மாநாட்டில் எப்படி பேச வேண்டும் என்று இங்கு நிறைய பேருக்கு தெரியவில்லை . நாம் நடத்த இருக்கு மாநாட்டில் எப்படி பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். கட்சி தொடங்கி இரண்டு வருடங்களே ஆகிறது. ஆனால் அவர்களை மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அங்கிள் அங்கிள் என ஏன் அணில் கத்துகிறது, ஜிங்குள் ஜிங்கிள் என்றுதானே கத்த வேண்டும் என்று விஜய் விமர்சித்துள்ளார் சீமான். முதலமைச்சராக இருந்தவர் எப்படி அங்கிளாக மாறினார். தலைவர் விஜயகாந்தை பற்றி பேசினால் ஓட்டு கிடைத்துவிடும் என்று அவரைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் மக்களுக்கு தெரியும் யாருக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்று.
குஜராத் கலவரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்றாவது வெளியில் வரதான செய்யும். ஈரோட்டில் காசு கொடுக்கும் போது தடுக்காத தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடும்போது தடுக்காத தேர்தல் ஆணையம், இந்த விஷயத்தை மட்டும் எப்படி உண்மையை பேசுகிறது என்று நம்ப முடியும். வாக்குப்பதிவு மெஷின் ஜப்பானில் தயாரித்து கொடுக்கிறது இருப்பினும் அதில் வாக்கு பதிவு செய்கிறார்கள். 42 நாட்கள் வாக்குப்பதிவு மிஷினை பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். அதற்கு போலீஸ் காவல் வேற. உங்ககிட்டயே சம்பளத்தையும் வாங்கிகிட்டு அந்த போலீஸ் காவலுக்கும் நிக்கிறாங்க.
பெட்டியை எப்படி மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முதலீட்ட ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறாராம் அப்போது முதலீடு ஈர்க்கச் சென்றதெல்லாம் எங்கே போனது. முதல்வராக வந்தால் அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு வேலைக்கு 100 கையெழுத்து விடுவேன் என்று கூறினார். அதே 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலையெழுத்தை மாற்றலாமே. பாஜக ஆபீஸ்ல அனைத்து மதங்களுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்களாம். முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் முதலில் சொத்து வரி , மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு இதுப்பற்றி சிந்திக்கலாம்.
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…
சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…
அதிமுகவில் உட்கட்சி பூசல் மற்றும் அணிகள் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த…
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதியான மகளிர் உதவித்தொகை திட்டத்தை நனவாக்கும் வகையில், 60 வயது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…