BREAKING: ஆட்சியைப் பிடிக்கப் போகும் விஜய்…. சற்றுமுன் அவசர ஆலோசனை..!

By Nanthini on வைகாசி 5, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய அரசு அமையவுள்ள சூழலில், சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நாளை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன், சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.