ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் போதாததால் டிசம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 18ஆம் தேதிக்கு பிரச்சார கூட்டத்தை கட்சியினர் மாற்றி வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
அந்த இடத்தில் காவல்துறையிடம் அனுமதி கேட்டதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் KA செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து அந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் தரப்பில் இருந்து 84 நிபந்தனைகள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீசார் விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் டிசம்பர் 18ஆம் தேதிக்கு விஜயின் பிரச்சார கூட்டத்தை கட்சியினர் மாற்றி உள்ளனர்.
