தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் சினிமாவில் மட்டுமின்றி மக்கள் நலனிலும், மாணவர்கள் நலனிலும் அக்கறை கொண்டவர். இதற்காக அவர் தொடங்கியதே விஜய் மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இந்த இயக்கத்தின் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், 10, 12ஆம் வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவித்தார்.
நடந்து முடிந்த லியோ சக்ஸஸ் மீட்டிலும் அரசியல் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார். தற்பொழுது சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு உதவ பிரபலங்களும், மீட்பு படையினரும் அதிகளவில் செயல்பட்டு வருகின்றனர். தற்பொழுது விஜய் ரசிகர்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
தனது ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதை அறிந்த விஜய் ‘பெருங்குடி மக்கள் மன்ற’ நிர்வாகிக்கு கால் செய்து அங்கே இருக்கும் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களை பத்திரமாக உதவிகள் செய்யுமாறும் கூறினார். இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…