“விஜய் நெற்றியில் இருக்கும் அந்த கருப்பு பொட்டு, கையில் சிகப்பு கயிறு”… ஜோதிடர்கள் சொல்லும் பகீர் உண்மை… இதுல இவ்வளவு விஷயம் இருக்கா…?

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தனது பணிகளைத் தொடங்கியுள்ளார். விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் கடைபிடிக்கும் ஆன்மிகம் மற்றும் ஜோதிட ரீதியான நம்பிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, சமீபகாலமாக அவரது நெற்றியில் மின்னும் அந்த கறுப்பு நிறப் பொட்டின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான காரணங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தேர்தலுக்கு முன்பு வரை வழக்கமான குங்குமப் பொட்டை அணிந்து வந்த விஜய், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கறுப்பு நிறப் பொட்டை வைக்கத் தொடங்கியுள்ளார். இது சாதாரண மை அல்ல, ‘அரகஜா’ எனப்படும் ஒரு அபூர்வ திலகம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மிகம் மற்றும் ஜோதிட ரீதியாக மிகுந்த சக்தி கொண்டதாகக் கருதப்படும் இந்த அரகஜாவை, பல சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்களும் தங்களின் வசீகரத்திற்காகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்காகவும் பயன்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில், முதலமைச்சர் விஜய்யும் தனது அரசியல் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள இந்த சென்டிமென்டை பின்பற்றத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரகஜா என்பது புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் மற்றும் அரிய வகை மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். இதற்கு எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும் குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் இந்த அரகஜா, அணிபவருக்கு ஒருவித ஈர்ப்பு சக்தியையும் (Vashyam), மன உறுதியையும் தருவதாக ஆன்மிகப் பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். விஜய்யின் இந்தத் திடீர் மாற்றம், அவரது ஆஸ்தான ஜோதிடர்களின் அறிவுரைப்படி அமைந்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

விஜய்யின் ஆன்மிக ஈடுபாடு என்பது இன்று நேற்று தொடங்கியதல்ல. வாக்குப்பதிவு முடிந்த கையோடு அவர் திருச்செந்தூர் மற்றும் சீரடி உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்தது நாடு அறிந்ததே. கைகளில் சிவப்பு நிறக் கயிறு அணிவது, முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஜோதிட ஆலோசனைகளை மேற்கொள்வது என அவர் தீவிரமான சென்டிமென்ட் வாதியாகவே வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் தனது ஜோதிடர் ராதன் பண்டிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கும் அளவிற்குச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய், நிர்வாக ரீதியிலான சவால்களை ஒருபுறம் எதிர்கொண்டாலும், மறுபுறம் ஜோதிட ரீதியான பாதுகாப்புகளை பலப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறார். தேர்தலுக்குப் பிந்தைய இந்த பரபரப்பான சூழலில், “அரகஜா” திலகம் அவருக்குத் தொடர்ந்து வெற்றியைத் தேடித்தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ, விஜய்யின் இந்த ‘கருப்பு பொட்டு’ ரகசியம் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது மட்டும் நிஜம்.

Nanthini

Recent Posts

அரசியல் வரலாற்றிலேயே முதல்முறை…. CM விஜய் கையில் எடுத்த புது ஆயுதம்… இனி ஒரு போன் கால் போதும்…. ஷாக்கில் எதிர்க்கட்சிகள்…!

பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…

2 minutes ago

திமுக கூடாரத்தை காலி செய்த கூட்டணிக் கட்சிகள்… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு ‘தவறான’ முடிவு… உள்ளடி வேலைகளை அம்பலப்படுத்தும் பரபரப்பு ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…

5 minutes ago

“இது நியாயமே இல்லை”… அத்துமீறிய விமான நிறுவன ஊழியர்… தோனிக்கு நேர்ந்த அநீதி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோவின் பின்னணி…!

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…

8 minutes ago

“விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல் போயாச்சு.. அடுத்து இவரா?”…. EPS-க்கு காத்திருந்த அடுத்த ஷாக்…. மாவட்ட நிர்வாகிகளை கூட்டி எடப்பாடி போட்ட அதிரடி உத்தரவு…!

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின்…

9 minutes ago