“உங்களை சொல்லல சார்.. உட்காருங்க!”… சட்டசபையில் உதயநிதி கொடுத்த பதிலடி… அப்செட்டான அமமுக எம்.எல்.ஏ…!!!

Spread the love

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த ஆட்சி 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டது என்றும், தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் தயவிலேயே ஆட்சி நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 233 தொகுதிகளில் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான பலம் இன்றி பிற கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து இருப்பதை அவர் விமர்சித்தார்.

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய உதயநிதி, அரசியல் காரணங்களுக்காக அந்தத் திட்டங்களை முடக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகியவற்றுக்கான தொகைகள் பயனாளிகளுக்குச் சென்றடையவில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அடுத்த மாதமும் தடையின்றித் தொடர வேண்டும் என எச்சரித்தார். இந்த அரசு வெறும் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ ஆட்சியாக இருக்கக் கூடாது என்றும் அவர் சாடினார்.

    முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் உதயநிதி கேள்விகளை எழுப்பினார். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாததால்தான் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் என்றும், வெற்றி பெற்ற பிறகு திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்குக் கூட நன்றி தெரிவிக்காமல் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், எம்.எல்.ஏ.க்களை “கடன் வாங்கி” ஆட்சி நடத்துவதாகவும், கூவத்தூரை மிஞ்சும் வகையில் தற்போது கூத்துகள் நடப்பதாகவும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

    உதயநிதியின் உரையின்போது, “ஒரு கட்சித் தலைவருக்கே தெரியாமல் அந்த எம்.எல்.ஏ-வை உங்கள் பக்கம் இழுத்துள்ளீர்கள்” என்று அவர் குறிப்பிட்டது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தன்னைக் குறித்துத்தான் என்று கருதிய அமமுக எம்.எல்.ஏ காமராஜ் எழுந்து ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தார். உடனே குறுக்கிட்ட உதயநிதி, “நான் உங்களைச் சொல்லவில்லை” என்று பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு காமராஜை அமர வைத்தார், இதனால் அவர் மிகுந்த அதிருப்தியுடன் தனது இருக்கையில் அமர்ந்தார்.

    Muthu Mani

    Recent Posts

    மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

    5 minutes ago

    “பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க” இறப்பதற்கு முன் உறவினர்களை அழைத்து அதிர்ச்சி கொடுத்த முதியவர்… சமூக வலைதளங்களில் வைரலாகும் கண்ணீர் சம்பவம்..!!

    மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…

    10 minutes ago

    தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

    18 minutes ago

    அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

    21 minutes ago

    மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

    உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

    23 minutes ago

    இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

    சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

    29 minutes ago