CINEMA
அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க சொன்ன கிறிஸ்தவ மகா சபை.. அதற்கு விஜய் ஆண்டனி என்ன சொன்னார் தெரியுமா.?
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காலில் செருப்பு போடாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வருகிறது. இவர் நடிகர் இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர் , ஒலி பொறியாளர் போன்ற பன்முகத்திறமை கொண்டவர். இவர் இசையமைத்து பாடிய நக்க முக்கா பாடலுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கோன்ஸ் கோல்டன் லயன் விருதை பெற்றதுடன், அந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் இந்த பாடல் 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிகெட் உலக கோப்பையில் ஒலிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நான் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.பின்னர் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் . இவரது படங்கள் மற்ற படங்களை காட்டிலும் தனித்துவம் வாய்ந்த கதைகளத்தை கொண்ட படங்களாக இருக்கின்றன.கடந்த ஆண்டு அவர் நடித்த பிச்சைகாரன் 2 வெளியாகி நல்ல வெற்றியைப்பெற்றது. இவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஹிட்லர். இப்படத்தை இயக்குனர் தனா இயக்கியுள்ளார்.
அதனை அடுத்து எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள “ரோமியோ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தாண்டி விஜய் ஆண்டனி அவர்கள் பொதுவெளியில் மக்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் நல்ல விஷயங்களை பேசி வருகிறார். வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை தத்துவமாக பேசுவதை இவர் தனித்துவமான விஷயம். இதனால் இவருக்கு பல ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அதே போல் தான் கருத்தாக பேச நினைத்து இயேசுவை பற்றி பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
தற்போது தேவனாகிய இயேசு அவர்கள் திராட்சை பழச்சாறு மதுவை குடித்ததாக பொதுவெளியில் பேசி விஜய் ஆண்டனியை கண்டித்து தமிழ்நாடு கிறிஸ்துவ மகாசபை குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி தற்போது பொதுவெளியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்று நாங்கள் அவர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சொல்லி இருந்தார்கள். தற்போது அதற்காக விஜய் ஆண்டனி நான் இயேசுவை அப்படி தவறாக கூறுபவன் அல்ல, அப்படி மீறி கூறி இருந்தாலும் என்னை மன்னியுங்கள் என்று அவர் தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
— vijayantony (@vijayantony) March 16, 2024